கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அணு உலையில் எரிபொருள் நிரப்ப வல்லுநர்கள் கூடங்குளம் வந்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதலாவது அணு உலை விரைவில் செயல்பட இருக்கிறது.
இதற்காக அணு உலையில் எரிபொருள் நிரப்ப முதல்கட்ட ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக, யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிக்காக மத்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் கூடங்குளம் வந்துள்ளனர்.
அணு உலையை ஆய்வு செய்யும் இக்குழுவினர், யுரேனியம் நிரப்புவதற்கான இறுதிக்கட்ட அனுமதியை வழங்க இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இந்த வாரத்திற்குள் முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
*News from puthiyathalaimurai.tv(11 September 2012 )
0 comments:
Post a Comment