Thursday 13 September 2012

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் கைது


கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சதீஷ்குமார் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் தி.மு.கவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் முரளிதரனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அணுஉலை முற்றுகை, அடையாள உண்ணாவிரதம், கடல்நீரில் மனித சங்கிலி என கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகிறது. கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சதீஷ்குமாரை, சென்னையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட சதீஷ்குமார், அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன், அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்த முகிலனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் மூன்று மாதம் சிறையில் இருந்த சதீஷ்குமர் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ்குமார் மற்றும் தி.மு.க வை சேர்ந்த சாத்தூர் ஒன்றியச் செயலாளர் முரளிதரன் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
*News from puthiyathalaimurai.tv(14 September 2012 )

Tuesday 11 September 2012

எரிபொருள் நிரப்ப வல்லுநர்கள் வருகை : மின் உற்பத்தி தொடங்குவதில் தீவிரம்


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அணு உலையில் எரிபொருள் நிரப்ப வல்லுநர்கள் கூடங்குளம் வந்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதலாவது அணு உலை விரைவில் செயல்பட இருக்கிறது.



இதற்காக அணு உலையில் எரிபொருள் நிரப்ப முதல்கட்ட ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக, யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிக்காக மத்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் கூடங்குளம் வந்துள்ளனர்.

அணு உலையை ஆய்வு செய்யும் இக்குழுவினர், யுரேனியம் நிரப்புவதற்கான இறுதிக்கட்ட அனுமதியை வழங்க இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இந்த வாரத்திற்குள் முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

*News from puthiyathalaimurai.tv(11 September 2012 )

Monday 10 September 2012

என்ன விலை கொடுத்தேனும் அணு‌உலையை மூடாமல் ஓயமாட்டோம் போராட்டக்காரர்கள் சூளுரை!


கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நேற்று தாக்குதல் நடத்திய நிலையில், இடிந்தகரையில் 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது. என்ன விலை கொடுத்தேனும் அணு‌உலையை மூடாமல் ஓயமாட்டோம் என போராட்டக்காரர்கள் சூளுரைத்துள்ளனர்.




தாக்குதலை கண்டித்து போராட்டம் : 

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து, பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் : 

கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டுமின்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து, தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு என்ற இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலை கண்டித்து சென்னையில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டில்லியிலும் போராட்டம் :

அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தலைநகர் டெல்லியிலும் எதிரொலித்தது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவினர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவ கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம்  : 

மீனவ மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாலைமறியல் நடைபெற்றது.
நேற்றைய தாக்குதலை கண்டித்து, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், மாவட்ட தலைநகரங்களில் 17 அமைப்புகள் சார்பில் இன்று  போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் பங்கேற்கவுள்ளன.
*News from puthiyathalaimurai.tv(11 September 2012 )

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி


தூத்துக்குடி  மணப்பாடு கிராமத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் மீனவர் அந்தோனிசாமி பலியானார்.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 40 வயதான மீனவர் அந்தோணிசாமி பலியானார். அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
சோதனைச்சாவடியை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி : தலைவர்கள் கருத்து


கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். கூட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தலைவர் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.




நாராயணசாமி குற்றச்சாட்டு :

கூடங்குளத்தில்,144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் கூடியது சட்ட விரோதமானது என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும் போராட்டக்காரர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பழ.நெடுமாறன் கண்டனம் : 

போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசியது கொடுமையானது என பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் மக்களின் நியாயமான சந்தேகங்களை போக்க எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அணுமின் நிலையம் தொடர்பாக அரசு சட்டப்படியான குழுவை அமைக்கவில்லை எனவும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார்.

ஞானதேசிகன் கேள்வி :

அணுஉலையை தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், பெண்கள் குழந்தைகளை வைத்து போராட்டம் நடத்துவது எந்தவகையில் நியாயம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை மிரட்டி போராட்டத்தில் ஈடுபட வைப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

எந்தப் பிரச்னையையும் வன்முறை மூலமாகவோ, ஒடுக்குமுறை மூலமாகவோ தீர்த்துவிட முடியாது என்பதை சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்வுகளிலிருந்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கூடங்குளம் மக்களின் உணர்வுகளை மிதிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் உணர்வுகளை மதித்து அரசு செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும்வரை அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ:

இந்தியாவில் 21 அணுஉலையிலிருந்து 2.7% மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது என்பதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்திவிட்டு சூரியசக்தி, காற்றாலையில் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன்:

அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூடங்குளம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )




மக்கள் மீதான தாக்குதலுக்கு காவல்துறையே பொறுப்பு – உதயகுமார்


கூடங்குளம் மக்கள் மீதான தாக்குதலுக்கு தமிழக காவல்துறையே பொறுப்பு என அணுஉலை எதிர்ப்புக் குழுவின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அமைதியாகத்தான் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். முன்னறிவிப்பு இல்லாமல் வன்முறையை எங்கள் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டதற்கு காவல்துறைதான் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறையினரை நாங்கள் சிறைபிடிக்கவில்லை. எங்கள் மக்கள் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை சிறைப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. காந்திய வழியில் நாங்கள் அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எதிர்கால சந்ததி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக போராடி வருகிறோம் என்றார்.

தமிழக முதல்வர் இதுகுறித்து வாய்திறக்காததான் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக மக்களை எப்படியும் நடத்தலாம் என்பதுதானே இதற்கு காரணம். கூடங்குளம் தவிர மற்ற பகுதிகளில் நடைபெறும் போராட்டம் எங்களைக் கேட்டு நடப்பதல்ல. தமிழக மக்கள் தாங்களாகவே ஆங்காங்கே போராடுகிறார்கள். இதற்கு முழு பொறுப்பு தமிழக காவல்துறைதான் என்று தெரிவித்தார். மேலும் அவர், தான் இப்போது அந்த ஊரில் இல்லை என்றும் மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி விட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கூடங்குளம் போராட்டத்தின்போது இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி, மக்கள் உண்பதற்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவில் மண்ணைப் போட்டு, மக்கள் மீது தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் தலைமையில் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினர் அவர்களுக்கு தெரிந்த மொழியில் பேசியிருக்கிறார்கள். காந்தி, இயேசு, புத்தர் காட்டிய வழியில் நாங்கள் போராடுவோம் என்று உதயகுமார் கூறினார். மேலும் சாலை மறியலிலோ அல்லது காவல்துறையினரை தாக்கும் செயலிலோ ஈடுபட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தோழர்கள் மற்றும் ஊர்மக்களோடு பேசி பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அணுஉலை எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )


கூடங்குளம் நிலவரம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை


கூடங்குளத்தில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை குறித்து முதல்வர் ஜெயலலிதா உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலர், காவல்துறைத் தலைவர், உள்துறைச் செயலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதனிடையே கூடங்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பதற்றம் தணிந்து அமைதி திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன் ஆதரவு தெரிவித்துள்ளனர். அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நியாயம் கோரி போராடுபவர்கள் மீது சகிப்புத் தன்மை இல்லாமல் செயல்படுகிறது மத்திய அரசு என குற்றஞ்சாட்டியுள்ளார்.

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. கூட்டத்தை கலைக்க போராட்டக்காரர்கள் மீது போலீசார் மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீசினர். கூடங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. கண்ணீர் புகை குண்டு, தீ வைப்பு சம்பவத்தால் கூடங்குளம் பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் நாள் போராட்டம் :

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிரான இடிந்தக்கரை மக்களின் போராட்டம் இன்று இரண்டாம் நாளாக தொடர்கிறது. வாட்டும் குளிரில், கடற்கரையில் நேற்று விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலையில், கூடங்குளத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் சுற்றிவளைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட நெருங்கிய போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர் போலீஸார்.

சிறிது நேரம் சகஜ நிலை :

போலீஸார் நடத்திய கண்ணீர் புகை குண்டு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கூடங்குளத்தில் சிறிது நேரம் நிலைமை கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து கூடங்குளத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் தெரிவித்திருந்தார். மேலும் போராட்டக்காரர்களை கலைக்கவே கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் போராட்டத்தில் குழந்தைகளை கேடயங்களாக பயன்படுத்துவதாக ஜார்ஜ் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பொதுமக்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் பரவுகிறது :

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் கலவரம் வெடித்துள்ளது. கூடங்குளம் தடியடி சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணாடி உடைக்கப்பட்டது.

பெண் எஸ்.ஐ., உள்பட 4 போலீஸார் சிறைபிடிப்பு :

இதற்ககிடையில் கூடங்குளம் அருகே உள்ள பெரியதாழை சோதனைச் சாவடியில் பெண் எஸ்.ஐ., உட்பட 4 போலீஸார் சிறைபிடிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
உதயகுமார் கேள்வி : அணுஉலைக்கு எதிராக காந்திய வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். வன்முறையை தூண்டாத எங்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது சரியா. நிராயுதபாணிகள் மீது தமிழக அரசு தாக்குதல் நடத்தியிருக்கிறது. எந்தவிதத்திலும் நாங்கள் வன்முறையை தூண்டவில்லை. அணுஉலைக்கோ அங்குள்ள ஊழியர்களுக்கோ நாங்கள் அச்சுறுத்தலாக இல்லை, அப்படியிருக்கும் போது இப்படி எங்கள் மீது தாக்குதலை அவிழ்த்து விட்டிருப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார்.    


















கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின்உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், அணுஉலையில் எரிபொருள் நிரப்ப சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து, அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர். அதன்படி,  குழந்தைகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர்  நேற்று திரண்டனர். ஆனால், காவல்துறை தடுத்ததையடுத்து, கடற்கரையில் அமர்ந்து போராடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் என அரசு தரப்பின் சமரச முயற்சிகள் எடுபடாமல் போனதையடுத்து, விடிய விடிய கடற்கரையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த ஆண்டு தொடங்கிய போராட்டம், ஓராண்டும் மேலாக தொடர்ந்து நீடிக்கிறது. எனினும், அணுமின் நிலையத்தை  தொடங்குவதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து, நடத்திக் கொண்டிருக்கும் சுப.உதயகுமாரை அரசு நிர்வாகமும், காவல்துறையும் குறிவைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த முற்றுகைப் போராட்டத்தை முடக்க, அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. கூடங்குளத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, கலவரத் தடுப்பு வாகமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் எதற்கும் பயப்படாமல் போராட்த்தை தொடர்ந்தனர். இதனையடுத்து, கடற்கரையில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். இந்த நிலையில், அணுஉலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )




Thursday 6 September 2012

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து – 11 பேர் கைது


சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமுறைவாக உள்ள ஆலை அதிபர் முருகேசனை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

சிவகாசிக்கு அருகிலுள்ள முதலிப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று நண்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 38 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் வெடித்துச் சிதறியதில், ஒட்டுமொத்த தொழிற்சாலையும் இடிந்து தரை மட்டமானது. இதில், தொழிலாளர்கள் அனைவரும் பல அடி தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு, உடல் சிதறி உயிரிழந்தனர்.

தகவலறிந்து அவர்களை காப்பாற்றச் சென்றவர்களும், வேடிக்கைப் பார்த்தவர்களில் பலரும் தீ யில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கான உரிமம் ஏற்கனவே ரத்தாகியுள்ளது.. ஆயினும் அதன் உரிமையாளர் முருகேசன் தொடர்ந்து நடத்தியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதவிர, அந்த ஆலையில் 40 வகையான விதிமுறை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. பட்டாசு தயாரிப்பில் சுத்தியல் போன்ற கனமான பொருட்களை பயன்படுத்தியது, அளவுக்கு அதிகமான வெடி பொருட்களை சேமித்து வைத்திருந்தது போன்றயே விபத்துக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில்,  அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

puthiyathalaimurai.tv(6 September 2012 )
http://www.makkalsanthai.com/


பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில்  நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவில், கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானார்கள். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்திருந்தார்.

இதற்கு டி.ஜி.பி. ராமானுஜம், விழா அமைதியாக நடக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும், டி.ஐ.ஜி., ஆய்வாளர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
காவல்துறை தலைவரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவை அமைதியாக நடத்த பொதுமக்களும், ஏற்பாட்டாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More