தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன் மீது தொடர்ந்துள்ள வழக்கு பற்றி துளி பயமும் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்ககோட்டையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தி்ல் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் இதனை தெரிவித்தார்.
கடந்த ஆட்சியின் மீது 4 ஆண்டுகள் கழித்து தான் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது என்றும், ஆனால் இந்த ஆட்சி மீது ஓராண்டிலேயே மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மணல் கொள்ளை தாரளமாக நடைபெறுவதாக புகார் கூறிய அவர், மதுரையில் கிரானைட் குவாரி மூலம் 16 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
* News From http://puthiyathalaimurai.tv(07-Aug-2012)
http://www.makkalsanthai.com/
0 comments:
Post a Comment