சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் நீலகிரி மலை ரயில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் உந்து சக்தி குறைவு காரணமாக அவ்வப்போது ஆங்காங்கே நின்று விடுகிறது. இதனால் பயணிகள் சிரமமின்றி சென்று வரும் வகையில் 4 பெட்டிகளுடன் இருந்த மலை ரயில் 3 பெட்டிகளாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மலை ரயிலின் பெட்டிகளை புனரமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. மலை ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகள் இரண்டும், ஒரு பொதுப் பெட்டியும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
ரயிலின் இருக்கைகளும் மாற்றப்பட்டு, கண்ணாடியுடன் கூடிய ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
குன்னூர் ரயில்வே பணிமனையில் உள்ள இந்த மலை ரயில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
* News From http://puthiyathalaimurai.tv(07-Aug-2012)
http://www.makkalsanthai.com/
0 comments:
Post a Comment