திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரியம்மாள்பட்டி கிராமத்தில் மயில்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவிரியம்மாள்பட்டி கிராமம் அருகேயுள்ள அணைக்காடு பகுதியில் விளைநிலங்களில் விளையும் கம்பு,சோளம் போன்ற பயிர்களை அப்பகுதியில் உள்ள மயில்கள் நாசம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் மயில்களின் தொல்லையை சமாளிக்க சிலர், குருணை விஷத்தை தானியங்களில் கலந்து நிலங்களில் வைத்ததாகக் கூறப்படுகிறது இந்த விஷம் கலந்த தானியங்களை உண்டு கடந்த சில நாட்களில் மட்டும் 9 மயில்கள் உயிரிழந்துள்ளன.
தேசிய பறவையான மயில்களை கொல்வது சட்டப்படி தவறு என்பதால், இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
* News From http://puthiyathalaimurai.tv(07-Aug-2012)
http://www.makkalsanthai.com/
0 comments:
Post a Comment