திண்டுக்கல் மாவட்டம் லந்தகோட்டை கிராமத்தை சேர்ந்த தலித் வாலிபர் சாமிநாதன் குடிநீர் பிரச்னைக்காக ஊராட்சி மன்ற தலைவர் மோகனை சந்தித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் மற்றும் அவர் மகன் உள்ளிட்ட 4 பேர் சாமிநாதனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக தெரிகிறது.
மேலும் சாமிநாதன் மீது காவல் துறையினர் கொலை வழக்கு பதிவுசெய்ததாகவும் கூறப்படுகிறது. பொய் வழக்கு போடப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மோகன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி பாலபாரதி என்பவர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
* News From http://puthiyathalaimurai.tv
0 comments:
Post a Comment