Wednesday 29 August 2012

மத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு : நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ரயில் மறியல் போராட்டம்


இந்தியாவில் இலங்கை படையினருக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ, கூறியதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பெரம்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, ஷீரடி சென்னை எக்ஸ்பிரஸ், திருப்பதி சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களை அவர்கள் மறித்ததால் இந்த ரயில்களின் போக்குவரத்தில் ஒரு மணிநேரம் ஏற்பட்டது.
மேலும், போராட்டத்தின் போது, பல்லம் ராஜூவின் உருவபொம்மையையும் போராட்டக்காரர்கள் எரித்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் போராட்டக்காரர்கள் முழுக்கங்களை எழுப்பினர்.

* News From http://puthiyathalaimurai.tv(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More