Tuesday 28 August 2012

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்


இலங்கை ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும் என்ற மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜுவின் அறிவிப்பை பிரதமர் மன்மோகன் சிங் மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

நீலகிரியில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் இலங்கை வீரர்களை மீண்டும் இலங்கைக்கே திரும்பி அனுப்ப வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், இலங்கை ராணுவத்தினருக்கு இப்படிப்பட்ட பயிற்சிகள் இனிமேல் அளிக்கப்படமாட்டாது என்று மத்திய அரசு உறுதியாக கூறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல்லம் ராஜுவின் அறிவிப்பு தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் காயப்படுத்துகிறது என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையை இந்தியாவின் நட்பு நாடு என்று கூறுவது தவறு என்றும், இந்தியாவை விட இலங்கை சீனாவையே நட்பு நாடாக கருதுகிறது என்றும் கூறியுள்ளார்.


* News From http://puthiyathalaimurai.tv(28-Aug-2012)
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More