கிருஷ்ணகிரியில் சட்டவிரோதமாக இயங்குவதாக புகாரில் சிக்கியுள்ள கிரானைட் குவாரிகளில் ஆய்வு நடந்து வருகிறது. மதுரையைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிரணைட் குவரிகளில் அரசு விதிமுறைகளுக்கு மாறாக கற்கள் வெட்டி எடுப்பதாக புகார்கள் வந்தன.
இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 5 குழுக்களாக பிரிந்து மாவட்டத்தில் இருக்கும் 100,க்கும் மேற்பட்ட குவாரிகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் மதுரையில் செயல்படும் சட்டவிரோத கிரனைட் குவாரிகள் தொடர்பாக 5வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
* News From http://puthiyathalaimurai.tv(06-Aug-2012)
http://www.makkalsanthai.com/
0 comments:
Post a Comment